|
திருமணமான பிறகு கவர்ச்சியாக நடிக்கக்கூடாதா?
Aug 14,2008 00:00
by
admin
திருமணமான பிறகு கவர்ச்சியாக நடிக்கக் கூடாதா? என்றார் ஜோதிர்மயி. அவர் மேலும் கூறியதாவது: நான் திருமணமானவள் தான். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பந்துபளகா’ கன்னட படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நான் கவர்ச்சியாக தான் நடித்து வருகிறேன். கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கவே விரும்புகிறேன். கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை. திருமணத்திற்கு பிறகு தான் தமிழில் நடித்தேன். இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறேன். திருமணத்திற்கு பிறகு வேலை செய்யும் பெண்களை போலதான் நடிகைகளும். ‘தலைநகரம்‘,’நான் அவனில்லை’ போன்ற படங்கள் மூலம் என்னை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே போல கன்னட ரசிகர்களும் ஏற்பார்கள். இவ்வாறு ஜோதிர்மயி கூறினார். |