|
பசுபதியுடன் நடிக்க மறுத்தேனா?: சிம்ரன் வருத்தம்
Jun 29,2008 00:00
by
admin
'குசேலன்' படத்தில் பசுபதியின் ஜோடியாக நடிக்க கேட்டபோது பசுபதியுடன் நடிக்க மறுத்ததாகவும் அதிக சம்பளம் கேட்பதால் சிம்ரனுக்கு வரும் வாய்ப்புக்கள் பறி போவதாகவும் வதந்திகள் கிளம்பின. இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது, பசுபதியுடன் நடிக்க விருப்பமில்லாததால் தான் நான் 'குசேலன்' படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வரும் செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. குசேலனில் நடிக்க முடியாமல் போனதற்கு கால்ஷீட் பிரச்சினைதான் காரணமே தவிர பசுபதி அல்ல. நான் பணம் அதிகமாக கேட்பதாகவும் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். அப்படியிருந்தால் என் கைவசம் நான்கு படங்கள் எப்படி வந்திருக்கும். நான் நடிக்கும் நான்கு படங்களிலும் வித்தியாசமான காதாபாத்திரங்களில் நடிக்கிறேன். நான் பணத்திற்காக நடிப்பவள் அல்ல. படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன் என்றார் சிம்ரன்.
|