இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது: 'குசேலன்' படத்துக்கு 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. டப்பிங்கும் முடிந்துவிட்டது. வரும் திங்கட்கிழமை முதல் இசை சேர்ப்பு பணி தொடங்கும். ரஜினிக்குரிய பஞ்ச் வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 75 ஆண்டு தமிழ் சினிமா வரலாறு பற்றிய பாடல் படத்தில் இடம் பெறுகிறது. 'சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா' என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். பாடல் கேசட் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். உலகம் முழுவதும் சாய்மீரா நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இப்படத்துக்கு 'கதாநாயகடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், இசை. அரவிந்த் கிருஷ்ணா, ஒளிப்பதிவு. ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.
|